தமிழக விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நவம்பர் 15ம் தேதி கடைசி நாள்.. வெளியான முக்கிய அறிவிப்பு
திருவாரூர்: சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளின் பயிர்களுக்கு காப்பீடு கிடைக்கும். அந்த வகையில் சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
