கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு அழைத்த உதயநிதி.. ஓகே சொன்ன பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டதை பிரதமரிடம் வலியுறுத்தினார்டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்ததுடன் இந்தியா கூட்டணியின் முன்னேற்றம் குறித்தும் விவாதித்தார்கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன.
சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் ஜனவரி 19 முதல் 31-ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியின் தொடக்க விழாவை சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி, தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.