திடீரென கொட்டித் தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்.. உச்சகட்ட எமர்ஜென்சி..
அமெரிக்காவின் நியூயார்க் மாகணப் பகுதிகளில் நேற்று முன் தினம் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. தெருக்கள் மற்றும் சாலைகள் மழை நீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. முழங்கால் அளவு தண்ணீரில் மக்கள் நடந்து செல்லும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளன.

நியூயார்க் நகரத்தின் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் புகுந்ததால் முழுவதுமாக மூடப்பட்டு அதன் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ரயில்கள் சேவைகளும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். அடிக்குமாடி குடியிருப்பின் தரைத் தளத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

image