மழைக்காலத்தில் மின்சாரத்தால் ஆபத்து.. இதையெல்லாம் பண்ணாதீங்க.. மின் வாரியம் எச்சரிக்கை!

மழைக்காலத்தில் மின்சாரத்தால் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கூறியுள்ளது. மின்சார விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு இந்த எச்சரிகையை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

இந்நிலையில் மின்சார விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொது மக்களுக்கு மழைக்காலத்தில் மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை, மின்னல், காற்று காலங்களில் பொது மக்கள் மின்சார கம்பங்களுக்கு செல்லும் மின்சார பாதை மற்றும் மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்ஃபார்மர் எனும் மின் மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தி சரி செய்துக்கொள்ள வேண்டும் குறிப்பிட்டுள்ளது.


மின் கம்பிகளை தொடக்கூடாது

அறுந்து இருக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது என்றும் அருகில் செல்லக் கூடாது என்றும் மற்றவர்களையும் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதன பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு ஏற்படும் வகையில் வீடு கட்டுமானங்களில் (ELC நிலகசிவு மின்திறப்பான் கருவிகளை பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தீபாவளி பரிசு.. பிரதமர் இ பஸ் சேவையில் 100 பேருந்துகள்.. கலக்கும் மகாராஷ்டிரா அரசு.. தமிழக அரசின் முடிவு என்ன?

மின் கம்பம் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் ஆடு, மாடுகளை போன்ற கால்நடைகளை கட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. வீட்டில் துணி காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்த ஒரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்லக் கூடாது என்றும் பஸ், லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ, கீழ் பகுதியிலோ நிறுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

மின் பழுது, மின்சார குறைபாடுகள் மற்றும் மின்சாரத்தால் ஏற்படும் விபத்து குறித்து உடனடியாக அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மின்சாரம் தாக்கி ஐந்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் மின்சார வாரியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

image