புதிய ரேஷன் கார்டு... டபுள் குட்நியூஸ் சொன்ன அமைச்சர்சக்கரபாணி பொங்கலுக்குள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.
இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறதுஇது குறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும். 9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
புதிய ரேஷன் அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்..
மேலும், தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வபோது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரினையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.