திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி.. தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை.. என்ன மேட்டர்?
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், சிறப்பு தினங்களின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, மற்றொரு நாளில் வேலை நாளாக ஈடுகட்டப்படும். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 24) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.