நாட்டை உலுக்கிய கோர ரயில் விபத்து நடந்தது எப்படி? பகீர் தகவல்!

நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 238ஆக உயர்ந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்கத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 3. 20 மணிக்கு ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

image