உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.. தொண்டை கரகரப்பு, இருமல் பிரச்சனைகளுக்கு நிவாரணம்..!
வாய் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் ஒரு சில தொண்டை பிரச்சினைகளுக்கு நிவாரணமாக பல நூற்றாண்டுகளாக உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. பல நேரங்களில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக செயல்பட்டு நம்மை நிம்மதியாக வைக்கிறது.சளி, ஃப்ளு அலர்ஜி , சைனஸ் தொற்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி, தொண்டை தொற்று அல்லது அழற்சிக்கு சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய அசௌகரியங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது
உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, அழற்சி மற்றும் எரிச்சலை குறைப்பதன் மூலம் தொண்டை வலியை கணிசமாக குறைக்கிறது. வீக்கமடைந்திருக்கும் திசுக்களில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்றவும் உப்பு உதவுகிறது.

- உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் காணப்படுகின்றன. எனவே உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவி, தொற்றுகளில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது.

- சுவாச நோய் உள்ளவர்களுக்கு உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் மிகவும் நன்மை பயக்கும். இது கட்டியாக இருக்கும் சளியை உடைத்து தளர்த்தவும், congestion-லிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: