macaw.org.in Logo
    • Recherche Avancée
  • Client
    • S'identifier
    • Enregistrez
    • Mode jour
M369 MEDIA SOLUTIONS
Preetha Cover Image
User Image
Faites glisser pour repositionner la couverture
Preetha Profile Picture
Preetha
  • Chronologie
  • Groupes
  • Aime
  • Suivant
  • Les adeptes
  • Photos
  • Les vidéos
Preetha profile picture
Preetha
2 ans

TODAY HEADLINE NEWS
சந்திரயான் 3 விண்கலம் நிலவை நெருங்கி உள்ள நிலையில் இனி வரும் ஒவ்வொரு நொடியையும் முக்கியமானதாக பார்க்கிறது இஸ்ரோ. இந்நிலையில் சந்திரயான்-3
சந்திரயான் 3 விண்கலம் நிலவிற்கு மிக நெருக்கமாக உள்ள நிலையில் அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விக்ரம் லேண்டர் பிரிப்பு:
நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த சந்திரயான் 3 விண்கலத்தின் தொலைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ ஷேர் செய்தது. இதனை தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது டிவிட்டரில், இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் என்றும் இறங்கும் பணி ஆகஸ்ட் 23, 2023 அன்று, சுமார் 17.45 மணி நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டதில் இருந்தே தீவிரமாக கண்காணிக்கப்பட்ட வருகிறது.
விக்ரம் லேண்டர் நிலவுக்கு மிக அருகில் உள்ளது. முழு ஆரோக்கியத்துடன் அதே திறனுடனும் உள்ள விக்ரம் லேண்டர் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நிலவின் மிக அருகில் சென்றுதான் தோல்வியை தழுவியது. நிலவில் வேகமாக தரையிறங்கியதால் விக்ரம் லேண்டர் சேதமடைந்தது.
ஆனால் இம்முறை அந்த மாதிரியான தவறு நடக்காமல் இருக்க விக்ரம் லேண்டரின் ஒவ்வொரு நகர்வையும் இஸ்ரோ தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. குறிப்பாக விக்ரம் லேண்டரின் கால்கள் கடந்த முறையை காட்டிலும் இம்முறை வலிமையாகயும் சுறுங்கி விரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். அதன் பிறகு அதில் உள்ள ரோவர் தரையிறங்கு தனது பணியை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

image
image
image
Aimer
Commentaire
Partagez
Preetha profile picture
Preetha
2 ans

NEW HEALTH INFORMATION :

Knuckle Cracking: அடிக்கடி நெட்டி முறிப்பது சரியா..?
கைகளை நெட்டி முறிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஒரு சிலர் நெட்டி முறிக்கும் அந்த ஒலியை கேட்ட பின் நிம்மதி அடைகிறார்கள். ஒரு சிலருக்கு இது ஒரு புதுவித புத்துணர்ச்சியை அளிக்கிறது.
ஆனால் இந்த பழக்கம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அழிக்கக்கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா?

விரல் எலும்புகளின் மூட்டுகளுக்கு இடையில் சுற்றி வரும் ஒருவகையான திரவமே உங்களை நெட்டி எடுக்கத்தூண்டுகிறது.
டென்ஷன் அதிகமாக இருப்பவர்களும் நெட்டி முறிப்பார்கள்.

மன அழுத்தம் உள்ளவர்களும், மனநோய் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
எப்போதோ ஒன்றிரண்டு முறை நெட்டி முறிப்பதால் மிகப்பெரிய விளைவு எதுவும் ஏற்படாது என்றாலும் அடிக்கடி தொடர்ந்து செய்யக்கூடாது
எந்தப் பழக்கமுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்தில்தான் முடியும். இரண்டு எலும்பு

மூட்டுகளின் இடையில் உள்ள தசைநார்களே மூட்டுகள் உராய்வதைத் தடுக்கின்றன.
தொடர்ந்து அவ்வாறு செய்யும்போது இந்த தசைநார்கள் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது.
விரல்களை அளவுக்கு அதிகமாக மடக்கும் போது தசைநார்களின் வேலையை முடக்கிவிடும்.
அதுவே ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் வரக் காரணமாகிவிடும்.

அமெரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அகாடமியின் செய்தித் தொடர்பாளரும் எலும்பியல் வல்லுநருமான டாக்டர் லியோன் பென்சன்
நீங்கள் அடிக்கடி நெட்டி முறிப்பவர்களில் ஒருவராக இருந்தால், இது உங்களுக்கு ஏன்

Knuckle Cracking – மூட்டு வலி:
இதைச் செய்வதன் மூலம் உங்கள் வலி குறைகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மை கிடையாது. அதற்கு பதிலாக, உங்கள் விரல்களிலும் மணிக்கட்டிலும் அதிக வலியை ஏற்படுத்துகிறீர்கள்.

வீக்கம்:
பொதுவாக நெட்டி முறிக்கும் போது வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அடிக்கடி நெட்டி முறிப்பது உங்கள் மூட்டுகளுக்கு இடையில் குழிகளை உருவாக்குகிறது. இதனால் விரல்கள் பலவீனமாக மாறலாம்.

பலவீனமான விரல்கள்:
காலப்போக்கில் கைகளில் செயல்பாடு குறைவு ஏற்படுகிறது.
இது பெரும்பாலும் கடுமையான நிகழ்வுகளில் ஏற்படுகிறது. குருத்தெலும்பு தடித்து போகலாம்.

எலும்பு வடிவத்தை மாற்றுகிறது வளைந்த விரல்களை உண்டாக்குகிறது.
எனவே எப்போதாவது நெட்டி முறிப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அடிக்கடி இதனை செய்து வந்தால் மட்டுமே சிக்கல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

imageimage
Aimer
Commentaire
Partagez
Preetha profile picture
Preetha
2 ans

HI WE SEE ABOUT INTERESTING SCIENCE FACTS .👀

1. வளரும் ஈஃபிள் கோபுரம்:
ஒவ்வொரு வருடமும் ஈஃபில் கோபுரமானது கோடை காலத்தில் 15 CM உயரம் வளரும். ஒரு பொருள் வெப்பமடையும் போது, ​​அதன் அணு துகள்கள் அதிகமாக நகரும் அப்பொது அளவில் சற்று பெரிதாக காணப்படும் – இது வெப்ப விரிவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. வெப்பநிலை குறையும்போது அது மீண்டும் சுருங்குகிறது. இது இரும்பு போன்ற திடப்பொருட்களிலும் ஏற்படுகிறது. இந்த காரணத்திற்னால்தான் பாலங்கள் மற்றும் பெரிய கட்டமைப்புகள் கூட அளவில் சற்று பெரிதாக காணப்பட வாய்ப்புள்ளது. இதே நிகழ்வுதான் ஈஃபிள் கோபுரத்திற்கும் நடக்கிறது.

2. நகரும் கண்டம்:
ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா கண்டமானது வடக்கு நோக்கி வேகமாக 7 சென்டிமீட்டர் நகர்ந்து வருகிறது இப்படியே இது நகர்ந்து வருவதால் இது கல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்காவின் மீது மோதும்.

3. உலகமே அழிந்தாலும் இறக்காத ஒரே இனம்:
இந்த உலகம் அழிந்தால் அனைத்தும் அழிந்துவிடும் என நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு டார்டிகிரேட் என்ற உயிரினம் எந்த ஒரு வெப்பநிலையிலும் , எந்த ஒரு இடத்திலும் விண்வெளியில் கூட உயிரினம் ஆகும். இது அளவில் மிக மிக சிறியது எனவே இது உயிர்பிழைத்து விடும்..

4. தேனீக்களின் சக்தி:
இந்த உலகில் உயரமாக பறக்கூடிய ஒரு உயிரினம் என்ன என்று கேட்டாம் நாம் அனைவரும் பறவையில் இனத்திலுள்ள கழுகு என்று கூறுவோம் ஆனால் ஒரு தேன்னீயால் எவரெஸ்டு சிகரத்தின் உச்சியை தாண்டி கூட பறக்க முடியும்.

5. அண்டார்டிகாவின் இரத்த ஆறு:
இதுவரை ஆறு என்றாலே ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் மட்டும்தான் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம் ஆனால் அது பொய் என நிரூபிக்கும் வகையில் உள்ள ஒரு ஆறுதான் அண்டார்காவில் உள்ள இந்த இரத்த(blood falls) ஆறு, இந்த ஆறு உண்மையில் இரத்த ஆறுதானா,இதற்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
இரத்த ஆற்றின் பிண்ணனி-blood falls explanation

இந்த இரத்த ஆறானது 1911-ஆம் ஆண்டு தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்பவரால் கண்டுபிடிக்கபட்டது அன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் இந்த ஆறு கண்டுபிடிக்கபட்டதால் இந்த சிகப்பு நிறத்திற்கான காரணத்தை கண்டறிய பல காலங்கள் ஆகின.

அதுவரை இந்த சிகப்பு நிறத்திற்கான காரணம் நீரில் இருக்கூடிய சிகப்பு பாசிகள் என நம்பபட்டது. இந்த ஆறுக்கான முக்கிய காரணமாக குறிப்பிடுவது பனிக்கு அடியில் 2 மில்லியன் ஆண்டுகளாக ஒரு ஓடையாக இருந்துள்ளது.

அப்பொழுது இந்த ஓடையில் மட்டும் கிட்டதட்ட 17 வகையான நுண்ணுயிர்கள் இருந்துள்ளன இவை அனைத்தம் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர்வாழக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி பனிக்கு அடியில் உயிர்வாழ்ந்த நுண்ணுயிர்களில் இருந்து சல்பர் மற்றும் இரும்பு போன்றவை வெளிவந்துள்ளது. இந்த இரும்பு மற்றும் சல்பர் பனிக்கு அடியில் இருந்து மேலே வரும்போது ஆக்ஸிஜனுடன் வேதிவினைக்கு உள்ளாக்கபட்டு சிகப்பு நிறமாக மாறி இரத்த ஆறாக நம் கண்களுக்கு தோற்றமளிக்கிறது.எனவே இந்த உலகில் நடக்கும் அனைத்து விசயங்களுக்கு பின்னாலும் அறிவியல் உள்ளது ஒரு சிலவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருசிலவற்றை நம்மால் புரிந்துகொள்ளமுடியாமல் உள்ளோம் இதுதான் இயற்கையின் சிறப்பு.

image
image
image
Aimer
Commentaire
Partagez
Preetha profile picture
Preetha
2 ans

HEADLINE NEWS:
தென்காசியில் இந்தியா வடிவில் நின்ற 760 பள்ளி மாணவர்கள்... வந்தே மாதரம் முழங்கி உலக சாதனை
சங்கரன்கோவிலில் 760 மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து இந்தியா வரைபடம் வடிவில் வந்தே மாதரம் பாடல் முழங்க செய்து ஜாக்கி புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் இடம்பெற்றுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் பொருட்டு 760 மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து இந்திய வரைபடம் வடிவில் நின்று கொடியசைத்து வந்தே மாதரம் முழங்க ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா அனைத்து பகுதிகளிலும் நேற்று கொண்டாடப்பட்டது. சங்கரன்கோவில் மைதானத்தில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 760 பேர் ஒருங்கிணைந்து இந்திய வரைபடம் வடிவில் நின்று வந்தே மாதரம் பாடலை முழங்க ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இதற்காக தொடர்ந்து மூன்று நாட்களாக 760 மாணவ, மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்திய வரைபட வடிவில் நின்று தங்கள் கைகளில் இருந்த கொடிகளை அசைத்து வந்தே மாதரம் பாடலை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடி முழங்கினர். இந்த நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் பழனி செல்வம் வழி நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார்.

imageimage
Aimer
Commentaire
Partagez
Preetha profile picture
Preetha
2 ans

BEAUTY TIPS 2.
உடம்பை டீடாக்ஸ் பண்ற மாதிரி முகத்தையும் பண்ணணுமாம்... எப்படினு தெரிஞ்சிக்கங்க...

டீடாக்ஸ் என்றாலே அது உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவது என்று தெரியும். அதனால் உடலில் தேங்குகிற கழிவுகளை வெளியேற்ற டீடாக்ஸ் பானங்கள், டீடாக்ஸ் உணவுகள் என எடுத்துக் கொள்கிறோம். ஆனால் உடலை டீடாக்ஸ் செய்வது போலவே சருமத்தையும் குறிப்பாக முகத்தையும் குறிப்பிட்ட இடைவெளியில் டீடாக்ஸ் செய்ய வேண்டியது மிக அவசியம். முகத்தை எப்படி டீடாக்ஸ் செய்வது என்று தெரியலையா? வாங்க பார்க்கலாம்.
டீடாக்ஸ் என்பது சமீபத்தில் அதிகமாக காதில் கேட்கிற வார்த்தையாக இருக்கலாம். டீடாக்ஸ் என்பது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துதல் என்று பொருள். உடல் டீடாக்ஸை போலவே முகத்தை டீடாக்ஸ் செய்யும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
முகத்துக்கு டீடாக்ஸ் :
முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கழிவுகள், அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
இதன் மூலம் சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு ஆகியவற்றைக் குறைத்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

1. ​நீர்ச்சத்தின் அவசியம்:
சருமத்தை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
அப்படி குடிக்கும்போது உடல் மற்றும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

2. க்ளே மாஸ்க்:
க்ளே மாஸ்க்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்கள் முழுமையாக வெளியேறும்.
கடைகளில் முகத்துக்குப் பயன்படுத்துகிற க்ளே மாஸ்க்குகள் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது அதற்கு பதிலாக முல்தானி மட்டியும் பயன்படுத்தலாம்.

3. ​மசாஜ் செய்யுங்கள்:
முகத்தை மசாஜ் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இது ஆயில் மசாஜாகவும் இருக்கலாம். அல்லது க்ரீம் அல்லது வீட்டு வைத்தியங்களின் மூலம் மசாஜ் செய்யலாம்.
தயிர், மஞ்சள் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதேபோல பேஷியல் ஆயில் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.
4. ​சீரம் பயன்படுத்துதல் :
முகத்துக்கு சீரம் பயன்படுத்துதல் மிக முக்கியம். இது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குவதோடு சருமத்தில் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும்.
குறிப்பாக சருமத்திற்கு நல்ல மாய்ஸ்ச்சரைஸராக செயல்படுவதோடு சருமத்தை கண்ணாடி போல பளபளப்பாக மாற்றும்.

image
image
image
image
Aimer
Commentaire
Partagez
 Chargez plus de postes
    Info
  • 83 des postes

  • Femelle
    Albums 
    (1)
  • Benifits of rice porridge
    Suivant 
    (2)
  • lucy bobby
    Sandhiya Kumar
    Les adeptes 
    (1)
  • Macaw Social Media
    Aime 
    (0)
    Groupes 
    (0)

© 2025 macaw.org.in

Langue

  • Sur
  • Blog
  • Contactez nous
  • Développeurs
  • Plus
    • politique de confidentialité
    • Conditions d'utilisation
    • Demande à être remboursé

Désamie

Êtes-vous sûr de vouloir vous libérer?

Signaler cet utilisateur

Important!

Êtes-vous sûr de vouloir supprimer ce membre de votre famille?

Vous avez fourré Preetha

Un nouveau membre a été ajouté avec succès à votre liste de famille!

Recadrez votre avatar

avatar

© 2025 macaw.org.in

  • Domicile
  • Sur
  • Contactez nous
  • politique de confidentialité
  • Conditions d'utilisation
  • Demande à être remboursé
  • Blog
  • Développeurs
  • Langue

© 2025 macaw.org.in

  • Domicile
  • Sur
  • Contactez nous
  • politique de confidentialité
  • Conditions d'utilisation
  • Demande à être remboursé
  • Blog
  • Développeurs
  • Langue

Commentaire signalé avec succès.

Le message a été ajouté avec succès à votre calendrier!

Vous avez atteint la limite de vos amis 5000!

Erreur de taille de fichier: le fichier dépasse autorisé la limite ({image_fichier}) et ne peut pas être téléchargé.

Votre vidéo est en cours de traitement, nous vous ferons savoir quand il est prêt à voir.

Impossible de télécharger un fichier : ce type de fichier n'est pas pris en charge.

Nous avons détecté du contenu réservé aux adultes sur l'image que vous avez téléchargée. Par conséquent, nous avons refusé votre processus de téléchargement.

Partager un post sur un groupe

Partager sur une page

Partager avec l'utilisateur

Votre message a été envoyé, nous examinerons bientôt votre contenu.

Pour télécharger des images, des vidéos et des fichiers audio, vous devez passer à un membre pro. Passer à Pro

Modifier loffre

0%

Ajouter un niveau








Sélectionnez une image
Supprimer votre niveau
Êtes-vous sûr de vouloir supprimer ce niveau?

Avis

Payer par portefeuille

Supprimer votre adresse

Êtes-vous sûr de vouloir supprimer cette adresse?

Alerte de paiement

Vous êtes sur le point d'acheter les articles, voulez-vous continuer?
Demande à être remboursé

Langue

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese